தூது சென்ற மேகம்
என்ன சேதி சொன்னதோ!
வாடைக் காற்று பட்டதும்
வாடி நின்றதோ!
பருவத் தென்றல் காற்று
பாடி வந்ததோ!
பாசம் எனும் கோட்டையில்
அடைந்து கொண்டதோ!
ஊடல் கொண்ட நெஞ்சம்
உறங்க வில்லையோ!
உறக்கம் தெளிந்த பின்னும்
கனவு கலையவில்லையோ!
காத்திருந்த நாட்கள் யுகம்
ஆகிப் போனதோ!
மழையும் போதுமென கார்மேகம்
கலைந்து சென்றதோ!
தென்றல் காற்றில் விலகிச்
செல்லும் மேகம் போலத்தான்
பிரிவு என்றும் தெரியாமல்
பிரிந்து செல்கிறேன்
No comments:
Post a Comment