Sunday, January 15, 2012

கண்ணின் நீர்த் துளி

தொடர்ந்து சென்றாலும்
சுய நலத்தை
சுயவரமாக்கும் உலகில்
உனக்கு மட்டும் என்ன
தொலைத்து வந்தாலும்
தொடர்கிறாயே!
எதுவும் அற்ற
இந்த பொய்யுலகில்
உண்மை உறவைத்தேடும்
என்னைப் போல்
நீயும் முட்டாள்
என் கண்ணின்
நீர்த் துளி